திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் காவலர் சேக் அப்துல்லா (38). இவருக்கு திருமணமாகி மனைவி சர்மிளா மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை பணி முடித்த சேக் அப்துல்லா ஏர்போர்ட் ஒயர்லஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இரவு தனது குழந்தைகளுடன் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்த சேக் அப்துல்லா தனது படுக்கை அறைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து அவரது மனைவி அறைக்கு படுக்க சென்ற போது கட்டிலில் விரிக்கும் துணியால் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலை பணி முடித்த சேக் அப்துல்லா ஏர்போர்ட் ஒயர்லஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இரவு தனது குழந்தைகளுடன் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்த சேக் அப்துல்லா தனது படுக்கை அறைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து அவரது மனைவி அறைக்கு படுக்க சென்ற போது கட்டிலில் விரிக்கும் துணியால் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.