கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தாமாக முன்வர மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அத்தியாவசிய தேவையை தவிர மற்ற அனைத்து போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.


இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில், அவசர கால சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக நேற்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ரயில்வே வாரியத்தலைவர், அனைத்து மண்டல, கோட்டங்களில் ரயில்வே பொது மேலாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.


    அப்போது, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழியாக ரயில்வே அமைச்சகம் இதனை பரிந்துரைத்துள்ளது. மேலும், கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் ரயில்வே அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார், ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மத்திய படை பிரிவுகளில் உள்ள மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுள்ளவர்களை விண்ணப்பிக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 
Top