தேனி உழவர் சந்தையில் ரூ.150 விலையில் காய்கனி தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. தேனி உழவர் சந்தை கரோனா வைரஸ் சமூக பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கர்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இங்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கனிகள் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் குறைந்த விலையில் அனைத்து காய்கனிகளையும் வாங்குவதற்கு வாய்ப்பாக, தேனி உழவர் சந்தையில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான 18 காய்கனிகள் கொண்ட தொகுப்பு, ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கனி தொகுப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
Top